Monday, May 29, 2006

152: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 28

நூறுகால் மண்டாபம் தற்சமயம் தியான மண்டபமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அமைதியை நாடி தியானம் செய்வதை இங்கே பார்க்கலாம்.

அங்கே நடராஜர் அன்னை சிவகாமியுடன் ஆனந்த தாண்டவமாடி அருள்கிறார். நூறு கால் மண்டபத்திற்க்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்க்கும், உள்ள ஒற்றுமைகள் பல, அதில் ஒன்று நூறுகால் மண்டபத்தில் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அந்த வரிசை தூண் தவிர எல்லா தூண்களும் தெரியும் அதே போல் ஆயிரங்கால் மண்டபத்திலும் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அங்கிருக்கும் 994 தூண்களில், அந்த வரிசை தூண் தவிர மற்ற எல்லா 906 தூண்களும் தெரியும், அங்கும் இங்கும் நடராஜர் அன்னை சிவகாமியுடன் அருள்கிறார்.

சில வேற்றுமைகள் ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் பின்னனியில் திரைசீலை சிகப்பாகவும் மையமாகவும், நூறுகால் மண்டபத்தில் நடராஜரின் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையிலிருக்கும்.

நூறுகால் மண்டப படம் கிடைக்கவில்லை ஆகவே ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் ஒரு விதமான கோனத்தில்.


ஈசனையோ இஷ்ட தெய்வத்தையோ சற்றுநேரம் தியானம் செய்து வெளியேவர, நம் துர்குணங்களை சம்ஹாரம் செய்ய ருத்ரஅவதாரங்களான அகினி வீரபத்ரரும், அகோர வீரபரரும் நிற்கின்றனர். வியாழகிழமைகளில் இரு விரபத்ரகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதும், தினமும் அவரை சாந்தி செய்ய பலரும் வெண்ணையுருண்டை சாற்றுவதும் சிறப்பு.


வெண்ணைய் உருண்டை சாத்துபடி செய்து வணங்கும் பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் அகோர வீரபத்திரர்

இவர்களுடைய பாதத்தில் ஒருவித அதிர்வை உணரலாம்.

அடுத்த பதிவு ஊர்த்தவ தாண்டவரும், பத்ரகாளியும்.

1 comment:

சிவமுருகன் said...

வருக கோவர்தனன், தொடர்ந்து வரவும்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி கோவர்தனன்.