Monday, February 27, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 5

தற்போது நாம் நிற்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இங்கிருந்து தென் பகுதிக்கு சென்றால், வன்னி மரத்தடி விநாயகரும், சாட்சி லிங்கமும், வன்னிமரமும், வன்னி, நெல்லி, அரசு, வேம்பு, மந்தாரை, அத்தி, நாகலிங்க என பல விதமான மரத்தடியில் வீற்றிருக்கும் கணேச மூர்த்திகளை தரிசிக்கலாம். எதிரில் யானையும், ஒட்டகம் கட்டுமிடமும், ஆடி வீதியில் கோ மடமும் இந்த தென் பகுதியில் தான் உள்ளது.

தெற்கு பகுதியை சில பதிவுக்கு பிறகு சொல்கிறேன்,

வடபகுதியில் சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருக்கல்யாணமண்டபம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு தான் திருக்கல்யாணம் நடைபெற்றுவந்தது, அதை பார்க்க வி.ஐ.பி. க்கள் பாஸ் மூலம் மட்டுமே அனுமதிக்கபட்டனர், தற்போது இந்நிலை மாறி அனைவரும் காணும் வண்ணம், ஆடிவீதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கே திருமணம் நடந்து வருகிறது. தற்போது திருமணம் முடிந்த பிறகு அனைவரும் இங்கே எழுந்தருளி பக்தர்களை பேரின்பக்கடலில் ஆழ்த்துகின்றனர். இதில் விஷேசம் யாதெனில் திருப்பரங்குன்றத்து முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் திருமணத்திற்க்கு வருகை தருவதும், பெருமாள் அண்ணன் ஸ்தானத்திலிருந்து தாரைவார்த்து தர, திருமாங்கல்ய தாரனத்துடன் திருமணம் நடை பெருகிறது.


இம்மண்டபதின் மேடையின் வலது ஓரத்தில் உள்ள குண்டோதரனுக்கு திருகல்யாண நாளன்று முதல் படையல் செய்யபட்டு பின்னரே மற்ற தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் படைக்க படுகிறது.

திரும்பும் வழியில் 'எத்துன்பம் வந்தாலும் களைய இதோ நானிருக்கிறேன்' என்று சொல்லியபடி வியக்கிர பதத்துடனும், மனித உடலுடனும், சிங்கமுகத்துடனும் நிற்க்கும் சரபேஸ்வரை கண்ட மாத்திரத்தில் நம் துன்பங்கள் விலகும் விந்தையை அனுபவிக்கலாம். 'சங்கர சங்கர' நாமம் சொல்லி அவரை வலம் வந்து மீனாட்சி சந்நதி நோக்கி வரும் சமயத்தில், மீனாக்ஷி நாயக்கர் மண்டபதில் உத்திரதில் இருக்கும் ராசி மண்டலம் காண்போரின் கருத்தை கொள்ளை கொள்ள செய்யும்.

அடுத்து பதிவில் வருவது முதலிமண்டபம்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

Saturday, February 25, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 4

மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.




வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.


ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்.



முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 2

அம்மன் சன்னதியின் வாயிலில் காக்ஷியளிக்கும் கணேசனும், கார்திகேயனும்



சிவமுருகன்

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 1

மீனாக்ஷி அம்மன் கோவிலில் படங்கள், என் படகோப்பிலிருந்து சில.
முதலில் தும்பிக்கையானை துதித்து.




சிவமுருகன்

அடுத்த பதிவு

Monday, February 20, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 3

இப்போது வர இருப்பது அஷ்ட சக்தி மண்டபம்.

மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.

இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.

பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.

மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.







முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு