Wednesday, May 31, 2006

154: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 29


வீரபத்திரகளை வலம் வந்து கம்பத்தடி மண்டப்பத்தின் தெற்க்கு பகுதியில் வீரபத்திரர்களை போலவே உக்கிரமாக ஊர்த்தவதாண்டவரும், பத்ரகாளியும் அகோர தாண்டவமாடி நிற்கிறார்கள், இவர்களின் உக்கிரம் தனிய, வெண்ணை சாற்றி வழிபடுகின்றனர்.



மேலும் வெள்ளிதோறும் பெண்கள் பலர் இங்கே எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த பதிவில் தேவ சிற்பி விஸ்வகர்மா செதுக்கிய ருத்ர அவதார அனுமான்.

Monday, May 29, 2006

152: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 28

நூறுகால் மண்டாபம் தற்சமயம் தியான மண்டபமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அமைதியை நாடி தியானம் செய்வதை இங்கே பார்க்கலாம்.

அங்கே நடராஜர் அன்னை சிவகாமியுடன் ஆனந்த தாண்டவமாடி அருள்கிறார். நூறு கால் மண்டபத்திற்க்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்க்கும், உள்ள ஒற்றுமைகள் பல, அதில் ஒன்று நூறுகால் மண்டபத்தில் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அந்த வரிசை தூண் தவிர எல்லா தூண்களும் தெரியும் அதே போல் ஆயிரங்கால் மண்டபத்திலும் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அங்கிருக்கும் 994 தூண்களில், அந்த வரிசை தூண் தவிர மற்ற எல்லா 906 தூண்களும் தெரியும், அங்கும் இங்கும் நடராஜர் அன்னை சிவகாமியுடன் அருள்கிறார்.

சில வேற்றுமைகள் ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் பின்னனியில் திரைசீலை சிகப்பாகவும் மையமாகவும், நூறுகால் மண்டபத்தில் நடராஜரின் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையிலிருக்கும்.

நூறுகால் மண்டப படம் கிடைக்கவில்லை ஆகவே ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் ஒரு விதமான கோனத்தில்.


ஈசனையோ இஷ்ட தெய்வத்தையோ சற்றுநேரம் தியானம் செய்து வெளியேவர, நம் துர்குணங்களை சம்ஹாரம் செய்ய ருத்ரஅவதாரங்களான அகினி வீரபத்ரரும், அகோர வீரபரரும் நிற்கின்றனர். வியாழகிழமைகளில் இரு விரபத்ரகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதும், தினமும் அவரை சாந்தி செய்ய பலரும் வெண்ணையுருண்டை சாற்றுவதும் சிறப்பு.


வெண்ணைய் உருண்டை சாத்துபடி செய்து வணங்கும் பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் அகோர வீரபத்திரர்

இவர்களுடைய பாதத்தில் ஒருவித அதிர்வை உணரலாம்.

அடுத்த பதிவு ஊர்த்தவ தாண்டவரும், பத்ரகாளியும்.

Saturday, May 20, 2006

142: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 27

மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்து நாம் செல்வது சுவாமி சன்னிதியில் வலதுபக்கமுள்ள முருகனின் மூன்று சன்னிதிகள்.


அதில் முதலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டபின் 6.00 மணி முதல் - 8.15 மணி வரை ஒவ்வொரு சன்னிதிக்கு சென்று ஸ்லோகங்களை சொல்லியும், பக்தி பாடல்களை பாடியும், வணங்கும் குழுவினர் இங்கே குழுமுவர். அரோகாரா, ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், அமைதி வழிபாடும் செய்வர்.


அடுத்தடுத சன்னிதியில் திருத்தனி முருகனும், தனிகாசல முருகனும் மயில் மேல் அமர்ந்து அருபாலிக்கின்றனர், அடுத்த மூன்று சன்னிதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன.

கடைசி சன்னிதியின் எதிர் சன்னிதியில் நவகிரகங்கள் தத்தமக்குறிய திசைகளில் நின்று அருள் செய்கின்றனர்.


சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்கள் நவகிரகங்கள் எனப்படுகிறன.


நவகிரகங்கள் நாம் செய்த பூர்வ புண்ணியங்களை ஏற்ப நன்மையும், தண்டனைகளையும் வழங்குகின்றனர். நம்மை மோக்ஷத்திற்க்கு அழைத்து செல்வது இரண்டு செயல்கள். புண்ணியம் செய்வது ஒன்று. பகவான் நாமாவை சொல்வது இரண்டு. இவிரண்டையும் தவிர மோக்ஷம் பெற, நற்கதி பெற எவ்வழியுமில்லை. பகவான் நாமாவை சொல்வதே ஒரு புண்ணியம், அது தவிர புண்ணியம் என்ன உள்ளது அவனை போற்றி பாடுவது, அவனடியார்களை பேணுவது, ஊக்குவிப்பது போன்ற செயல்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போல் கோள் முதல் ஆள் வரை பகவானின் சொல்படி தான் ஆடுகின்றன.

இந்நவகிரகங்களை ஆதித்யாய, ஸோமாய, மங்களாய, புதாஸ்ய, குரு, சுக்ர, சனிப்யஸ்ய, இராகவே, கேதவே, நமோநமஹ என்று ஸ்லோகங்களை சொல்லியும் பிறகு கோளாறு பதிகம் சொல்லியும் வலம் வருவர். மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.

அடுத்த பதிவு நூறுகால் மண்டபம், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Tuesday, May 02, 2006

114: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 26

கம்பத்தடி மண்டபம்

கடந்த முறை கம்பத்தடி மண்டபம் பற்றிய பதிவில் அண்ணன் குமரன் அவர்கள் கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் 52 திருவுருவங்கள் இருப்பதாகவும், கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் உண்டு என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். உடனே அதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் வலையில் சுற்றி வந்த போது, இறைவன் சிவன் 64 ரூபங்களில் வழிபடபடுவதாகவும், அதில் லிங்க ரூபமே அதிக அளவில் கோவில் கொண்டுள்ளதாகவும் தெரிந்து கொண்டேன். 64ல் 52 உருவங்கள் நம் எல்லோருக்கும் ஒரே இடத்தில் காட்சி தருவது மதுரையில் தானிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.








மேலும் படங்கள் முந்தைய பதிவில்

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Monday, May 01, 2006

111: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 25

அடுத்த படியாக நாம் பைரவரை நோக்கி செல்லும் முன் இரு சன்னிதியை தரிசிக்கயுள்ளோம். பொற்பாண்டியன் என்ற மன்னனின் இந்த சன்னிதியில் இன்றும் அருவமாக இருந்து அம்மை-அப்பனை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. அடுத்த சன்னிதியில் உயர்ந்த மேடையில் ஒரு நடராஜர் விக்ரகங்கள் உள்ளன. இவர், சிதம்பர நடராஜரின் பிரதி பிம்பமாக கருதப்படுகிறார். 'பொன்னபல நடராஜர்', சிதம்பர நடராஜர் என்று இவரை போற்றுகின்றனர்.

அருகே அருள்பாலிப்பவர் சனிபகாவானுக்கு ஈஸ்வர பட்டம் வழங்கிய ஸ்வான எனப்படும் நாய் வாகனத்தை கொண்ட பைரவர். வடகிழக்கு என்பது ஈசானிய மூலை. இப்பகுதி காவலர்க்கு உரிய பகுதி. ஆக சொக்கநாதர் சன்னிதி முழூவதும் இவர் காவலுக்கு உட்பட்ட இடமாகும். மதுரையில் பல பைரவர் கோவில்கள் உள்ளன. இவருக்கு இராகுகால விஷேச அபிஷேக, அலங்காரங்கள், சிறப்பாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணியளவில் நடக்கும் சந்தன அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பைரவருக்கு எதிரில் வன்னிமரம், லிங்கம், கிணறு இம்மூன்றும் உள்ளது, சொக்கநாதர் முன் செய்த சத்தியத்திற்க்கு சாட்சி சொல்ல இம்மூன்றும் தோன்றியதாக வரலாறு.

அதற்க்கு அருகாமையில் மேலும் சில வகையான லிங்கமுள்ளது, அடுத்த பகுதியில் ஈசன் அக்ஷ்ய திருதியையில் சூடிய சந்திரன், தன்னுடைய இஷ்டநட்சத்திர மனைவியர்களான ரோஹினி, கிருத்திகையுடன் அருள்பாலிக்கிறார்.

இவ்வாராக நாம் சுந்தரேஸ்வரர் சன்னிதியை வலம்வந்து விட்டோம்.

அடுத்த பதிவு, கம்பத்தடி மண்டபத்தை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன் கிட்டும் என்று அண்ணன் குமரன் அவர்கள் கூறினார். நாம் கம்பத்தடி மண்டபத்தை ஒருமுறை சுற்றி வருவோம்.



முந்தைய பதிவு

அடுத்த பதிவு