Monday, June 05, 2006

160: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 32

ஈசனை தியானித்து அவரது அக்னி ரூபமான காலபைரவர் கோலத்தில் கண்டு “ஈஸ்வர” பட்டம் பெற்ற சனீஸ்வரர். நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப நன்மை தீமைகளை இருக்கும் போதே தந்து நமது பவபுண்ணிய கணக்குகளை சமமாக்குகிறார். இதன் மூலம் ஜீவாத்மாவானது இவ்வுலகில் அலைகழிக்கப்படாமல் பரமாத்மாவான அவ்விறைவினிடம் சேர்க்க முக்கிய காரணமாகிறார். இவர் தனியாக இருக்கும் போது பொங்கு சனி என்று குறிப்பிடப்படுகிறார், அவ்வாறு சுவாமி சன்னிதியில் பொங்கு சனிஸ்வரரை இப்போது வணங்குகிறோம்.





இவருக்கு அடுத்தபடியாக உள்ள தூணில் இருப்பவர், ஒரு ரிஷிபத்தினியின் சிலை, அவருடைய கதை பற்றி எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்ததெல்லாம் கர்ப காலத்தில் பெண்கள் இவரிடம் தமக்கு சுக பிரசவம் ஆக வேண்டிக்கொள்வர், சுகமாக முடிந்தவுடன் எண்ணை சாற்றியும், பாவாடை சாற்றியும் வழிபடுவர். இதற்க்கு மேல் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

அடுத்த தூணில் இருப்பவர், கோபியர் மன்னன், குழலூதும் கண்ணன். அங்கே அவர் நிற்பது குழலூதிய படி, அழகாக இருக்கும் இச்சிலை அனைவருக்கு எட்டிவிடும் அதனாலோ என்னவோ இச்சிலை சற்றே சிதிலமடைந்து உள்ளது.

அடுத்த பதிவு நிறைந்த மணதுடன் வெளி பிராகரத்திற்க்கு வருகிறோம்.

159: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 31

இப்பதிவில் சிவனின் ஆஸ்தான பிளைகளான சமயகுரவர்கள் நால்வரின் சன்னிதிக்கு செல்கிறோம். இச் சன்னிதி, பத்ர காளிக்கு இடப்பக்கம், அமைதியே உருவான தென்மேற்கு மூலையில் உள்ளது. இந்த சன்னிதியில் அதிகாலை அபிஷேகத்திற்க்கு பிறகு ஞானப்பால் வழங்கப்படுவதும், இரவு பள்ளியறை பூஜையின் போது இங்கிருந்து தான் தேவார பாடல் பாட ஆரம்பிப்பர்.

இவர்களை வணங்கி வலப்பகம் திரும்புகையில் உள்ளது பிரசாத ஸ்டால்


அடுத்த பதிவில் உட்ப்ரகார படங்கள்

முந்தைய பதிவு ____________________________________ அடுத்த பதிவு

Thursday, June 01, 2006

155: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 30

இப்பதிவில் சிவசங்கரனின் அவதாரமான அனுமனை தரிசிக்கிறோம். செந்துரத்தை தன் உடல் முழூவதும் பூசி, ராம காதைகளை கேட்டு கொண்டிருக்கும் அந்த ராம பக்தன் இதோ, தேவ சிற்பி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்டு, ஓரே இரவில் கிடைக்கபெற்ற அனுமனுனின் சிலை, பார்க்கவும் கண்கோடி வேண்டுமே, இதை பதிக்க என் முன்னோர் என்ன தவம் செய்தனரோ.
ஆஞ்சனேயர்

வெற்றிலை மாலை சாற்றியும், எள் விளக்கேற்றியும் வணங்குகின்றனர்.

ஆண்களும்...
பெண்களும்...
குடும்பமாகவும்... குழுக்களாகவும்... இவரை வேண்டுவது சிறப்பு. இவரை ஆஞ்சனேயர் துதி செய்து வலம் வருவோம். இவருக்கு எதிரில் சொக்கநாதரின் பிட்டுக்கு மண்சுமந்த லீலை உள்ளது.
மேலும் சில படங்கள்
இப்பதிவு செல்வன் அவர்களின் கவனத்தை பெரும் என்று நம்புகிறேன்.

Wednesday, May 31, 2006

154: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 29


வீரபத்திரகளை வலம் வந்து கம்பத்தடி மண்டப்பத்தின் தெற்க்கு பகுதியில் வீரபத்திரர்களை போலவே உக்கிரமாக ஊர்த்தவதாண்டவரும், பத்ரகாளியும் அகோர தாண்டவமாடி நிற்கிறார்கள், இவர்களின் உக்கிரம் தனிய, வெண்ணை சாற்றி வழிபடுகின்றனர்.



மேலும் வெள்ளிதோறும் பெண்கள் பலர் இங்கே எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த பதிவில் தேவ சிற்பி விஸ்வகர்மா செதுக்கிய ருத்ர அவதார அனுமான்.

Monday, May 29, 2006

152: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 28

நூறுகால் மண்டாபம் தற்சமயம் தியான மண்டபமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அமைதியை நாடி தியானம் செய்வதை இங்கே பார்க்கலாம்.

அங்கே நடராஜர் அன்னை சிவகாமியுடன் ஆனந்த தாண்டவமாடி அருள்கிறார். நூறு கால் மண்டபத்திற்க்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்க்கும், உள்ள ஒற்றுமைகள் பல, அதில் ஒன்று நூறுகால் மண்டபத்தில் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அந்த வரிசை தூண் தவிர எல்லா தூண்களும் தெரியும் அதே போல் ஆயிரங்கால் மண்டபத்திலும் நடு தூண்வரிசையில் நின்றுபார்த்தால் அங்கிருக்கும் 994 தூண்களில், அந்த வரிசை தூண் தவிர மற்ற எல்லா 906 தூண்களும் தெரியும், அங்கும் இங்கும் நடராஜர் அன்னை சிவகாமியுடன் அருள்கிறார்.

சில வேற்றுமைகள் ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் பின்னனியில் திரைசீலை சிகப்பாகவும் மையமாகவும், நூறுகால் மண்டபத்தில் நடராஜரின் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையிலிருக்கும்.

நூறுகால் மண்டப படம் கிடைக்கவில்லை ஆகவே ஆயிரங்கால் மண்டபத்திலிருக்கும் நடராஜரின் ஒரு விதமான கோனத்தில்.


ஈசனையோ இஷ்ட தெய்வத்தையோ சற்றுநேரம் தியானம் செய்து வெளியேவர, நம் துர்குணங்களை சம்ஹாரம் செய்ய ருத்ரஅவதாரங்களான அகினி வீரபத்ரரும், அகோர வீரபரரும் நிற்கின்றனர். வியாழகிழமைகளில் இரு விரபத்ரகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதும், தினமும் அவரை சாந்தி செய்ய பலரும் வெண்ணையுருண்டை சாற்றுவதும் சிறப்பு.


வெண்ணைய் உருண்டை சாத்துபடி செய்து வணங்கும் பக்தர்கள்

சிறப்பு அலங்காரத்தில் அகோர வீரபத்திரர்

இவர்களுடைய பாதத்தில் ஒருவித அதிர்வை உணரலாம்.

அடுத்த பதிவு ஊர்த்தவ தாண்டவரும், பத்ரகாளியும்.

Saturday, May 20, 2006

142: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 27

மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்து நாம் செல்வது சுவாமி சன்னிதியில் வலதுபக்கமுள்ள முருகனின் மூன்று சன்னிதிகள்.


அதில் முதலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டபின் 6.00 மணி முதல் - 8.15 மணி வரை ஒவ்வொரு சன்னிதிக்கு சென்று ஸ்லோகங்களை சொல்லியும், பக்தி பாடல்களை பாடியும், வணங்கும் குழுவினர் இங்கே குழுமுவர். அரோகாரா, ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பி உலக நன்மைக்காக கூட்டு வழிபாடும், அமைதி வழிபாடும் செய்வர்.


அடுத்தடுத சன்னிதியில் திருத்தனி முருகனும், தனிகாசல முருகனும் மயில் மேல் அமர்ந்து அருபாலிக்கின்றனர், அடுத்த மூன்று சன்னிதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன.

கடைசி சன்னிதியின் எதிர் சன்னிதியில் நவகிரகங்கள் தத்தமக்குறிய திசைகளில் நின்று அருள் செய்கின்றனர்.


சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, இராகு, கேது என்ற ஒன்பது கோள்கள் நவகிரகங்கள் எனப்படுகிறன.


நவகிரகங்கள் நாம் செய்த பூர்வ புண்ணியங்களை ஏற்ப நன்மையும், தண்டனைகளையும் வழங்குகின்றனர். நம்மை மோக்ஷத்திற்க்கு அழைத்து செல்வது இரண்டு செயல்கள். புண்ணியம் செய்வது ஒன்று. பகவான் நாமாவை சொல்வது இரண்டு. இவிரண்டையும் தவிர மோக்ஷம் பெற, நற்கதி பெற எவ்வழியுமில்லை. பகவான் நாமாவை சொல்வதே ஒரு புண்ணியம், அது தவிர புண்ணியம் என்ன உள்ளது அவனை போற்றி பாடுவது, அவனடியார்களை பேணுவது, ஊக்குவிப்பது போன்ற செயல்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போல் கோள் முதல் ஆள் வரை பகவானின் சொல்படி தான் ஆடுகின்றன.

இந்நவகிரகங்களை ஆதித்யாய, ஸோமாய, மங்களாய, புதாஸ்ய, குரு, சுக்ர, சனிப்யஸ்ய, இராகவே, கேதவே, நமோநமஹ என்று ஸ்லோகங்களை சொல்லியும் பிறகு கோளாறு பதிகம் சொல்லியும் வலம் வருவர். மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.

அடுத்த பதிவு நூறுகால் மண்டபம், அக்னிவீரபத்திரர், அகோர வீரபத்திரர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Tuesday, May 02, 2006

114: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 26

கம்பத்தடி மண்டபம்

கடந்த முறை கம்பத்தடி மண்டபம் பற்றிய பதிவில் அண்ணன் குமரன் அவர்கள் கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானின் 52 திருவுருவங்கள் இருப்பதாகவும், கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் உண்டு என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். உடனே அதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் வலையில் சுற்றி வந்த போது, இறைவன் சிவன் 64 ரூபங்களில் வழிபடபடுவதாகவும், அதில் லிங்க ரூபமே அதிக அளவில் கோவில் கொண்டுள்ளதாகவும் தெரிந்து கொண்டேன். 64ல் 52 உருவங்கள் நம் எல்லோருக்கும் ஒரே இடத்தில் காட்சி தருவது மதுரையில் தானிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.








மேலும் படங்கள் முந்தைய பதிவில்

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Monday, May 01, 2006

111: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 25

அடுத்த படியாக நாம் பைரவரை நோக்கி செல்லும் முன் இரு சன்னிதியை தரிசிக்கயுள்ளோம். பொற்பாண்டியன் என்ற மன்னனின் இந்த சன்னிதியில் இன்றும் அருவமாக இருந்து அம்மை-அப்பனை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. அடுத்த சன்னிதியில் உயர்ந்த மேடையில் ஒரு நடராஜர் விக்ரகங்கள் உள்ளன. இவர், சிதம்பர நடராஜரின் பிரதி பிம்பமாக கருதப்படுகிறார். 'பொன்னபல நடராஜர்', சிதம்பர நடராஜர் என்று இவரை போற்றுகின்றனர்.

அருகே அருள்பாலிப்பவர் சனிபகாவானுக்கு ஈஸ்வர பட்டம் வழங்கிய ஸ்வான எனப்படும் நாய் வாகனத்தை கொண்ட பைரவர். வடகிழக்கு என்பது ஈசானிய மூலை. இப்பகுதி காவலர்க்கு உரிய பகுதி. ஆக சொக்கநாதர் சன்னிதி முழூவதும் இவர் காவலுக்கு உட்பட்ட இடமாகும். மதுரையில் பல பைரவர் கோவில்கள் உள்ளன. இவருக்கு இராகுகால விஷேச அபிஷேக, அலங்காரங்கள், சிறப்பாக கருதப்படுகிறது.

ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணியளவில் நடக்கும் சந்தன அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பைரவருக்கு எதிரில் வன்னிமரம், லிங்கம், கிணறு இம்மூன்றும் உள்ளது, சொக்கநாதர் முன் செய்த சத்தியத்திற்க்கு சாட்சி சொல்ல இம்மூன்றும் தோன்றியதாக வரலாறு.

அதற்க்கு அருகாமையில் மேலும் சில வகையான லிங்கமுள்ளது, அடுத்த பகுதியில் ஈசன் அக்ஷ்ய திருதியையில் சூடிய சந்திரன், தன்னுடைய இஷ்டநட்சத்திர மனைவியர்களான ரோஹினி, கிருத்திகையுடன் அருள்பாலிக்கிறார்.

இவ்வாராக நாம் சுந்தரேஸ்வரர் சன்னிதியை வலம்வந்து விட்டோம்.

அடுத்த பதிவு, கம்பத்தடி மண்டபத்தை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன் கிட்டும் என்று அண்ணன் குமரன் அவர்கள் கூறினார். நாம் கம்பத்தடி மண்டபத்தை ஒருமுறை சுற்றி வருவோம்.



முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Sunday, April 30, 2006

108: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 24

நடரஜர் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையில் உள்ளது. உள்ளே நடராஜரின் வித விதமான நடன சபைகளின் உற்சவர்கள் உள்ளனர். கனக சபை, ரத்தின சபை, சித்திர சபை.

__________
இன்று(30-4-2006) அக்ஷ்ய திருதியை,

இந்த நன்நாளில் பல்வேறு தெய்வங்கள், தங்களது செல்வங்களை பெருக்கிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவு அன்னை லக்ஷிமியை வணங்கியுள்ளனர். நாமும் அவளை வணங்கி அவளருள் பெருவோம்.

நடராஜர் சன்னிதிக்கு அருகில் இருப்பவர், அன்னை மஹாலக்ஷ்மி.

தாமரைபூவில் அமர்ந்தவளே- செந்
தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே (செந்தாமரை)
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே (செந்தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மீ தாயே
அமரர்கள் துதுபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாவே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (செந்தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே (செந்தாமரை)

என்று இவளை பாடித்தொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு செல்வோம்.
அங்கு சண்டிகேஸ்வரரிடம் அமைதியாக நம் வருகையை சொல்லி பின் விடைப்பெற்று மேற்கு நோக்கி வருவோம்.

அடுத்த பதிவு சனீபகவான் வணங்கி ஈஸ்வர பட்டம் பெற்ற 'கால பைரவர்'.
அவருக்கு எதிரில் இருக்கும் வண்ணி சிற்பமும்.

(இப்பதிவு என்னுடைய 108 வது பதிவு, மேலும் அன்னை லக்ஷ்மியின் படம் பதிவிலேற்றப் பட்ட 100வது படம்)

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Tuesday, April 25, 2006

104: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 23


சித்தர்களுக்கு எல்லம் சித்தர், இந்த எல்லாம் வல்ல சித்தர். இவரே கல்யானைக்கு கரும்பளித்தவர். சித்தராகி அமர்ந்து எல்ல நோய்களையும் தீர்த்து வருகிறார். இவரிடம் வந்த நோயாளி துன்புருவதில்லை.

இவரை பற்றியும், இவருடைய வழிதோன்றியவர்களையும் பற்றி மேலும் அறிய இங்கே. நன்றாக, நேர்த்தியாக, கோர்வையாக செய்யபட்ட ஒரு படைப்பு.

இவருடைய சன்னிதியில் பூக்குடாரம் அமைப்பது மிகவும் பிரசித்தியான வேண்டுதல், மேலும் சில வேண்டுதலாக இவருக்கு சந்தன காப்பு செய்வதும், விதவிதமான அபிஷேக, ஆராதனை செய்வதுமாகும்.



கம்பண்ணர் கண்ட காட்சி: முகமதியர் படையெடுப்பில் அன்னையின் ஆலயம் மிகவும் சேதப்படுத்தப்பட்டது. அதின் சின்னமாக, சாட்சியாக் இன்றும் இருப்பது இச்சான்று.

முகமதியர் படையெடுப்பு நடந்த பொழுது கோவில் சொத்துக்களை காக்க அன்ற சிவாச்சாரியர்கள் தற்போதைய கருவறையின் முன் சுவரை எழுப்பி அதன் முன் ஒரு போலியாக ஒரு லிங்கத்தை வைத்து பூஜிப்பது போல் செய்தனர். சுவாமி சிலைகளை ப்ரதிஷ்டை செய்யும் பொழுது உள்ளே வைர வைடூரைய கற்களை பதித்து ப்ரதிஷ்டை செய்வது வழக்கம் அதை கொள்ளை கொள்ள வந்தவன் ஏமாந்து சென்றான்.(அவன் உடைக்க தோற்று, உடைக்க முடியாமல் விட்டு விட்ட லிங்கமே துர்க்கை அம்மனுக்கு எதிர்பகுதியில் உள்ள மேடையில் வைக்கபட்டுள்ளது.) பின்னர் ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து தமது பக்தியால் இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.

அடுத்த பதிவு நடரஜர்கள், சன்டிகேஸ்வரர், மஹாலக்ஷ்மி, காலபைரவர்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Saturday, April 22, 2006

97: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 22

காசிவிஸ்வநாதருக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி நின்றருள்வது அன்னை விஷ்ணு ஸ்ரீ துர்க்கை.

அவள் எல்லா திக்கிலிருக்கும் மக்களை காக்க மஹிஷாசுரனை மரித்தவள், இவள் முன்னால் அனுதினமும் காலை அடியவர்கள் தம் குழுமத்துடன் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம் சொல்லி பாடுவதுவும், அவர்களை கேட்பதற்க்கும் பல ஜென்மங்களில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும். சங்கு சக்கரம் தாங்கி, அபய ஹஸ்த்தத்துடன் நிற்க்கும் அவளை நாமும் 'மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்' சொல்லி வணங்குவோம்.



அயி கிரிநந்தினி நந்திதமெதினி விஷ்வவினொதினி நந்தனுதே
கிரிவர் விந்த்ய் ஸிரொதினிவாசினி விஷ்ணுவிலாசினி ஜிஷ்ணுனுதே
பகவதி ஹெஸிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரி க்.ர்தே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 1

சுரவரவர்ஷிணி துர்தரதர்ஷிணி துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவனபொஷிணி ஸணகரதொஷிணி கில்பிஷமொஷிணி கொஷரதே
தனுஜ நிரொஷிணி திதிசுத ரொஷிணி துர்மத ஸொஷிணி சின்துசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 2

அயி ஜகதம்ப மத்ம்ப கத்ம்ப வனப்ரிய வாசினி ஹாசரதே
ஸிகரி ஸிரொமணி துணக ஹிமாலய ஸ்ர்ணக நிஜாலய மத்யகதே
மது மதுரெ மது கைடப கந்ஜினி கைடப பந்ஜினி ராசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 3

அயி ஸதகண்ட விகண்டித் ருண்ட விதுண்டித் ஸுண்ட கஜாதிபதே
ரிபு கஜ் கண்ட விதாரண் சண்ட பராக்ரம் ஸுண்ட ம்ர்காதிபதே
நிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 4

அயி ரண துர்மத ஸத்ரு வதொதித துர்தர நிர்ஜர ஸக்திப்ர்தே
சதுர விசார துரீண மஹாஸிவ தூதக்ர்த ப்ரமதாதிபதே
துரித் துரீஹ் துராஸய் துர்மதி தானவதூத க்ர்தான்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 5

அயி ஸரணாகத வைரி வதூவர வீர வராபய தாயகரெ
த்ரிபுவன மச்தக ஸூல விரொதி ஸிரொதி க்ர்தாமல ஸூலகரெ
துமிதுமி தாமர துன்துபினாத மஹொ முகரீக்.ர்த திக்மகரெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 6

அயி நிஜ் ஹுணக்ர்தி மாத்ர நிராக்ர்த் தூம்ர விலொசன தூம்ர ஸதே
சமர விஸொஷித ஸொணித பீஜ சமுத்பவ ஸொணித பீஜ லதே
ஸிவ ஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ தர்பித பூத பிஸாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 7

தனுரனு சணக ரணக்ஷணசணக பரிச்புர தணக நடத்கடகே
கனக பிஸணக ப்ர்ஷத்க நிஷணக ரசத்பட ஸ்ர்ணக ஹதாவடுகே
க்ர்த சதுரணக பலக்ஷிதி ரணக கடத்பஹுரணக ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 8

ஜய ஜய ஜப்ய ஜயெஜய ஸப்த பரச்துதி தத்பர விஸ்வனுதே
பண பண பிந்ஜிமி பிணக்ர்த நூபுர சிந்ஜித மொஹித பூதபதே
நடித நடார்த நடீனட் நாயக நாடித நாட்ய சுகானரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 9

அயி சுமநஹ சுமநஹ சுமநஹ சுமநஹ சுமனொஹர் கான்தியுதே
ஸ்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர் வக்த்ரவ்.ர்தே
சுனயன் விப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமராதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 10

சஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லிக மல்லிக பில்லிக பில்லிக வர்க வ்ர்தே
சிதக்ர்த புல்லிசமுல்ல சிதாருண தல்லஜ பல்லவ சல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 11

அவிரல கண்ட கலன்மத மெதுர மத்த மதணகஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூத கலானிதி ரூப பயொனிதி ராஜசுதே
அயி சுத தீஜன லாலசமானச மொஹன மன்மத ராஜசுதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 12

கமல தலாமல கொமல கான்தி கலாகலிதாமல பாலலதே
சகல விலாச கலானிலயக்ரம கெலி சலத்கல ஹ்ம்ச குலெ
அலிகுல சணகுல குவலய மண்டல மௌலிமிலத்பகுலாலி குலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 13

கர முரலீ ரவ வீஜித கூஜித லஜ்ஜித கொகில ம்ந்ஜுமதே
மிலித புலின்த மனொஹர் குந்ஜித ர்ந்ஜிதஸைல நிகுந்ஜகதே
நிஜகுண பூத மஹாஸபரீகண சத்குண ச்ம்ப்ர்த கெலிதலெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 14

கடிதட பீத துகூல விசித்ர மயூகதிரச்க்ர்த சந்த்ர ருசெ
ப்ரணத சுராசுர மௌலிமணிச்புர த்ம்ஸுல சந்நக சந்த்ர ருசெ
ஜித கனகாசல மௌலிபதொர்ஜித நிர்பர குந்ஜர கும்பகுசெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 15

விஜித சஹச்ரகரைக சஹச்ரகரைக சஹச்ரகரைகனுதே
க்ர்த சுரதாரக சணகரதாரக சணகரதாரக சூனுசுதே
சுரத சமாதி சமானசமாதி சமாதிசமாதி சுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 16

பதகமலம கருணானிலயே வரிவச்யதி யொஅனுதினன ச ஸிவெ
அயி கமலெ கமலானிலயே கமலானிலயஹ ச கத்ம ந பவெத்
தவ பதமெவ பர்ம்பதமித்யனுஸீலயதொ மம கிம ந ஸிவெ
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 17

கனகலசத்கல ஸிந்து ஜலைரனு சிந்சினுதே
குண ரணகபுவ்ம் பஜதி ச கிம் ந ஸசீகுச கும்ப தடீ பரிர்ம்ப சுகானுபவம
தவ சரணம் ஸரணம் கரவாணி நதாமரவாணி நிவாசி ஸிவம்
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 18

தவ விமலேன்துகுலம வதநேந்துமலம் சகலம் நநு கூலயதே
கிமு புருஹூத் புரீன்துமுகீ சுமுகீபிரசௌ விமுகீக்ரியதே
மம து மத்ம் ஸிவனாமதனெ பவதீ க்ர்பயா கிமுத் க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 19

அயி மயி தீனதயாலுதயா க்ர்பயைவ த்வயா பவிதவ்யமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ர்பயாசி யதாசி ததா.அனுமிதாசிரதே
யதுசிதமத்ர் பவத்யுரரி குருதாதுருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 20

இதி ஸ்ரீமஹிஷாசுரமர்தினிஸ்தொத்ரம் ஸம்பூர்ணம்

அன்னைக்கு முன்னால் இருப்பது ஸ்தல விருக்ஷமான கதம்ப மரம்.

அடுத்த பதிவு, சித்தர் சன்னிதியும் அப்பர் கண்ட காட்சியும்.



முந்தைய பதிவு

அடுத்த பதிவு

Friday, April 07, 2006

59: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 21

மதுரையை காக்கவும், வேதங்களை காக்கவும், ஈசன் செய்த விளையாட்டுக்கள் பலப்பல அதில் 64 திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் சொல்கிறது. (மதுரை வீரன் படத்தில் 14 திருவிளையாடல்களை தம் நாடியத்தில் வெளிப்படுத்துவார் நாட்டிய பேரொளி)

எங்கள் முக்கண்ணன் செய்த விளையாடல்கள் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை வண்ண சிற்ப்பதில் பார்க்க நீங்கள் சொக்கநாதர் சன்னிதியை தான் அடைய வேண்டும். ஈசனின் விளையாட்டுக்களை பார்க்க நின்று நிதானமாக ஒவ்வொரு சிற்ப சித்திரமாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு சிற்பங்களும் கண்ணைகவரும். தருமிக்கு பொற்குவையளித்தது, ரசவதம் செய்தது, மாணிக்கம்-விறகு-வளையல் விற்றது, பன்றிகளுக்கு பால்கொடுத்தது, மதுரைக்கு எல்லைகாட்டியது, புத்திர காமேஷ்டி யாகத்திலிருந்து மீனாட்சியம்மன் பிறந்தது, குண்டோதரனின் பசி-தாகம் தீர்க்க வைகையை கொண்டுவந்தது, பிட்டுக்கு மன்சுமந்தது, பிரம்படி பட்டது, நரியை பரியாக்கியது, எழுகடல் கொண்டுவந்தது, புலவர்கள் சபையில் வாதாடியது, என்று ஈசனின் விளையாட்டுக்கள் இன்றும் தொடர்கிறது.

காட்சிக்கு ஒருசில இதோ








முந்தைய பதிவு



முந்தைய பதிவு

அடுத்த பதிவு