Saturday, July 15, 2006

மீனாக்ஷி அம்மன் கோவில் அரிய படங்கள் # 2

மீனாக்ஷி அம்மன் கோவிலின் சில அரிய படங்கள் # 2



1858ல் அம்மன் சன்னிதி
எந்த கடையும்(தேங்காய் பழம் கடை உட்பட) இல்லை, தற்சமயம் மாடத்தில் இருக்கும் விநாயகரும், சுப்ரமணியரும் இப்படத்தில் இல்லை
மேலும் அஷ்ட சக்தி மண்டப மேல் மாடத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி அம்மன் திருவிளையாடல்கள் இப்படத்தில் இல்லை.




1912ல் அம்மன் சன்னிதி.
ஆனால் இப்படத்தில் எல்லா சிற்பங்களும், உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் வண்ணங்கள் இல்லாமல் இருப்பது சற்றே குறையாக தெரிந்தாலும், உள்ளதை உள்ளபடி சொல்லும் படங்கள் அழகாக இருப்பது சிறப்பு.


1935ல் மீனாக்ஷி அம்மன் சன்னிதி

13 comments:

ENNAR said...

சிவா!
பழைய படங்களையும் புதிய வற்றையும் போட்டால் ஒப்பிட்டு பார்ப்போமுள்ள அன்று எப்படி இருந்தது இன்று இப்படி உள்ளதென?

குமரன் (Kumaran) said...

அருமையான படங்கள் சிவமுருகன். ஒவ்வொரு காலத்திலும் அம்மன் சன்னதி கோபுரம் அடைந்து வந்த மாற்றங்களும் ஆனால் இராஜ கோபுரம் மாறாமல் நின்றதும் இந்தப் படங்களில் இருந்து நன்கு தெரிகின்றது. எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி.

rnatesan said...

எனக்கு என்னவோ வண்ணங்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பதுதான் அழகாகத் தோன்றுகிறது!!

Sivamurugan said...

என்னார் சார்,
வரும் பதிவுகளில் அவ்வாறு இடுகிறேன்.

Sivamurugan said...

நன்றி அண்ணா,
அருமையான படங்கள் சிவமுருகன். ஒவ்வொரு காலத்திலும் அம்மன் சன்னதி கோபுரம் அடைந்து வந்த மாற்றங்களும் ஆனால் இராஜ கோபுரம் மாறாமல் நின்றதும் இந்தப் படங்களில் இருந்து நன்கு தெரிகின்றது. எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி//

அடுத பதிவில் (#3) வடக்கு கோபுரத்தை இடுகிறேன்.

Sivamurugan said...

//எனக்கு என்னவோ வண்ணங்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பதுதான் அழகாகத் தோன்றுகிறது!!//

சரியாக சொன்னீர்கள் நடேசன் சார்.

வல்லிசிம்ஹன் said...

சிவ, நான் சிரு வயதில் அம்மா கோவிலுக்குப் போகும்போது(1950-60)
வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.
இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும்
அழகாக இருக்கும்.
இப்போது வண்ணம்,அவசரம்,வியாபாரம் எல்லாம் வந்துவிட்டது.
மிகவும் நல்ல படங்கள்.

Sivamurugan said...

வாங்க வல்லி,

இப்போது மேல மாசி வீதி தவிர, மற்ற மாசி வீதிகள் சுருங்க ஆரம்பித்து விட்டன. என்றால், உள்ளே இருக்கும் மற்ற வீதீகளை நான் சொல்லவும் வேண்டுமா?

வெளிவீதிகளும் மற்ற வீதீகளுமாவது சுருங்ககூடாது என்று இந்த ஆடி வெள்ளி நாளில் வேண்டுவோம்.

வல்லிசிம்ஹன் said...

சிவா,உண்மைதான்.
மதுரை வளமாக இருக்கணும்.எப்போதும் எல்லொருக்கும் மன நிறைவு கொடுக்கணும்.
மல்லி வாசம் நிறையணும்.
தமிழ் செழிக்கணும்.

Sivamurugan said...

//சிவா,உண்மைதான்.
மதுரை வளமாக இருக்கணும்.எப்போதும் எல்லொருக்கும் மன நிறைவு கொடுக்கணும்.
மல்லி வாசம் நிறையணும்.
தமிழ் செழிக்கணும்.//

நிச்சயம் இருக்கும், நிறையும்,செழிக்கும்.

Anonymous said...

பதிவுகளும், படங்களும் அற்புதம்

Anonymous said...

பதிவுகளும், படங்களும் அற்புதம்

Sivamurugan said...

வாங்க தங்கராஜ்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.