Friday, August 29, 2008

குருவிக்கு உபதேசம் செய்த படலம்





ஒருவன் எவ்வளவு தான் தான தர்மங்கள் செய்தாலும், தவறு என்று ஏதேனும் செய்துவிட்டாலும் அதற்க்கான பலனை இந்த உலகில் வந்து அனுபவித்த பிறகே மேலுலக வாசம் கிட்டும் அப்படி ஏற்பட்ட ஒரு சூழலில் தான் இந்த குருவிக்கு உபதேசம் செய்த லீலையாக சொல்லப்படுகிறது.

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்தில் 47வது திருவிளையாடலாக கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம் வருகிறது.

இதன் மூலம் தவறு செய்தவன் தன் தவற்றை உணர்ந்து, தன்னை திருத்திக்கொண்டால் பல அளர்பரிய காரியங்களை செய்யமுடியும் என்று விளங்க செய்கிறது இந்த படலம்.

தான் செய்த சில காரியங்களுக்காக ஒரு தர்மவான் குருவியாக பிறக்கிறார். குருவியானது உணவு தானியம் விழும் சத்தம் கேட்டாலும் பயந்து போய் கண் காணாத இடத்திற்க்கு கணநேரத்தில் பறந்து விடும் தன்மை கொண்டது. தன்னுடைய நிலையால் மிகவும் வேதனையடைந்த குருவி காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்தது. அச்சமயம் ஒரு சில வழிப்போக்கர்கள். எவ்வாறு உலக பந்தத்திலிருந்து விடுபடுவது என்று விவாதித்து கொண்டிருந்தனர், அவற்றை மரத்திலிருந்தபடியே கவனமாக கேட்டது அக்குருவி.


வழிப்போக்கர்களின் முக்கியமானவன் பேச ஆரம்பித்தான்.

ஆன்மீக அன்பர்களே! இவ்வுலகில் செய்த கர்மவினைகளை எவ்வாறு போக்குவது என்று நாம் அறிந்த வழிமுறைகளை சொல்லி விவாதிக்கலாம் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளான், தாங்களின் மொழிகாணா விழைகிறேன் என்றான்

வேடுவ தலைவன் என்று தன்னை அறிமுகம் செய்தவன் முதலில் ஆரம்பித்தான்! "இறையன்பர்களே! நான் கடந்து வந்த பாதையில் ப்ல பாவங்கள் செய்து விட்டேன் அதிலிருந்து விடுபட என்ன செய்ய என்று கேட்டதற்க்கு தீர்த்தமாடினால் முக்தி என்றார், அதுவும் பல ஆறுகள் கலக்கும் மூன்று ஆறுகளில் நிராடினால் நிச்சயம் முக்தி எனக்கூறானார், காட்டில் வாழும் தவசி ஒருவர், அவ்வாறே காவிரி பட்டிணம், மீனாட்சி பட்டிணம், வேணுவனம் ஆகிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று, காவிரி புண்ணிய நீறாடி பாவம் போக்கி வருகிறேன்" என்றார். "செய்த கர்மங்களை தீர்க்க தீர்த்தமாடுதல் புண்ணியம் என்றார் வேடுவ தலைவன்"

பிறகு தன்னை வணிகன் என்று அறிமுகபடுத்திக் கொண்ட ஒருவன் தொடர்ந்தான்
"ஆன்றோர்களே! வணிகத்தில் பல குளருபடிகளால் சிற்சில பாவங்கள் என்னையும் அடைந்தன அதனை போக்கி கொள்ள, பல தலங்களை அடைந்து சென்று க்ஷேத்திரங்களை தரிசித்து வர செய்த பாவம் தொலையும் என்றார் என் குருநாதர், அதன்படி எல்லா வல சர்வேசனை அவர் கோயில் கொண்டுள்ள 274 தலங்களை வணங்க்கி வழிபட்டு வருகிறேன், செய்த பாவங்கள் தொலைய க்ஷேத்திராடதனம் மிக மிக அவசியம். தன்னை அடைந்தவர்க்கு என்றும் நலனையே அளிக்கும் ஈசனை வணங்கினால் அதனினும் புண்ணியம் உலகில் இல்லை என்றான் வணிகன்.

முக்கியமானவன் இப்போது பேச ஆரம்பித்தான் "சீலர்களே! ஆக தாங்கள் சொன்னதன் படி பார்த்தால் மூர்த்தி, தலம், தீர்த்தம் சென்றாடினால் மிகவும் புண்ணியம் என்கிறீர்கள்! சரிதானே?" என கேட்டவுடன் எல்லோரும் அமோதிக்க "அப்பேற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தலமாக எது என சொல்வீரா?" எனக்கேட்டான் முக்கியஸ்த்தன்.

அனைவரும் திகைத்தனர்.

க்ஷேத்திராடதனம் (தலம்) செய்தால் நன்மை பயக்கும், (மூர்த்தி)இறைவழிபாடால் புண்ணியம் கிட்டும், (தீர்த்தம்)தீர்த்தம் ஆடினால் பாவம் தொலையும் இம்மூன்றும் அடைய பாரினில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும்! எவ்வாறு ஒரே ஒரு சக்தி வாய்ந்த தலம் என்று எவ்வாறு சொல்ல முடியும் எனக்கேட்டனர்! அவ்வாண்றோர்கள்!

ஆற்றல் சால் ஒருவன் மேல் நாள் ஆற்றவும் அறனே ஆற்றி
மாற்றம் இல் சிறிது பாவம் செய்த தன் வலத்தால் வந்து
தேற்றம் இல் கயவாய் ஆகிச் செனித்தலால் காகம் ஆதி
கூற்று என ஊற்றம் செய்யக் குருதி சோர் தலையது ஆகி.

(திருவிளையாடற் புராணம், 2276, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 3)

புட்கு எல்லாம் எளிதா ஊறு பாடு அஞ்சிப் புரத்துள் வைகி
உட்கி நீள் வனத்துள் போகி வழி மருங்கு ஒரு சார் நிற்கும்
கட்கு அவிழ்ந்து ஒழுகப் பூத்த கவிழ் இணர் மரம் மேல் வைகி
வெட்கம் மீதூரச் சாம்பி வெய்து உயிர்த்து இருக்கும் எல்லை.


(திருவிளையாடற் புராணம், 2277, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 4)

விடையவன் நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித்
தொடையவன் புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில்
உடையவன் தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட
நடையவன் ஒருவன் அந்த நறும் தரு நிழலில் சார்ந்தான்.



(திருவிளையாடற் புராணம், 2278, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 5)

இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.


(திருவிளையாடற் புராணம், 2279, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 6)

ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.


(திருவிளையாடற் புராணம், 2280, 47வது திருவிளையாடல், கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம், பாடல். 7)

தொடரும்

2 comments:

குமரன் (Kumaran) said...

முதல் பகுதி நன்றாக இருக்கிறது சிவமுருகன்.

சிவமுருகன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.