
Tuesday, April 19, 2011
அழகர் எத்தனை அழகரடி!

Wednesday, April 06, 2011
சித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்
சித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்

Sunday, March 06, 2011
Friday, January 28, 2011
Sunday, January 23, 2011
மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாடாக, திசையாக செல்வதை அவர் சொல்லி கேட்க வேண்டும்! கேளுங்களேன்!
திக் விஜய நாளன்று இந்த காட்சி மதுரை மாசி விதிகளில் நடக்கும். அம்மன் சந்நிதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - சூரிய பகவான், கீழ மாசி வீதி - தெற்க்கு மாசி வீதி சந்திப்பில் (மஹால் வடம் போகி தெருவில்) - அக்னி பகவான், தென்திருவாலவாய் சுவாமி கோவில் வாசலில் - எம தருமன், தெற்கு - மேற்கு மாசிவிதி சந்திப்பில் - பித்ரு, மேல மாசிவிதி திண்டுக்கல் ரோடு சந்திப்பில் - வருண பகவான், மேற்கு - வடக்கு மாசி வீதி சந்திப்பில் - வாயு தேவன், வடக்கு கிருஷ்ணன் கோவில் அருகில் - குபேரன் மற்றும் வடக்கு மாசி வீதி - கீழ மாசி வீதி சந்திப்பில் - ஈசானன். பின் கீழமாசி வீதியில் சொக்கநாத பெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் நேர் எதிர் நடக்கும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி.
அதே போன்ற அனைத்து வித கடவுளரும் வரும் ஒரு ஓவியம். அழகாக படமாக்கியுள்ளார் பிரபு என்ற கலைஞர்.

சூரிய பகவான் - மேலிருந்து மூன்றாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
அக்னி பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
எம தருமன் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
பித்ரு - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
மழை கடவுளான வருண பகவான் - மேலிருந்து நான்காவது வரிசையில் - இடமிருந்து கடைசி கட்டம்.
வாயு தேவன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து முதலாவது கட்டம்.
குபேரன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து இரண்டாவது கட்டம்.
மற்றும்
ஈசானன் - மேலிருந்து ஐந்தாவது வரிசையில் - இடமிருந்து மூன்றாவது கட்டம்.
என்ற அஷ்ட திக்கு பாலகர்களை மூலிகை ஓவியத்தில் திக்கு விஜயம் செய்யும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
Monday, January 10, 2011
ஆரியன்காவு உற்சவம்

கடந்த 26.12.2010 அன்று தர்ம சாஸ்த - புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்றைய நிகழ்வுகளை சன் டீவி தமது தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். தவறவிட்டவர்களுக்காக.இங்கே !
கீழே வர்ணனை வார்த்தைகளை அளித்தவர் " வலைச்சர ஆசிரியர் சீனாஅய்யா " அவர்கள்!
செண்டை மேளம் முழங்க வேடம் புனைந்த கலைஞர்கள் நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி - கோவிலையும், பரிவார தேவதைகளையும், உற்சவ மூர்த்திகளையும், மூலவர் தர்மசாஸ்தா மற்றும் புஷ்கலா தேவியையும் அழகாகப் படம் பிடித்து ஒளிபரப்பினர்.
கருப்பா நதி, கருப்பண்ண சாமி, கருப்பாயி, என அழைக்கப்படும் காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் உயர்த்திய வாளுடன் காட்சி அளித்தார். நாக சன்னிதியில் நாகம்மாள் காட்சி அளிக்கிறார்.
பெண் வீட்டார் தாலிக்கொடி ஊர்வலத்தில் தீபம் ஏற்றிய தட்டுகளுடன் மாப்பைள்ளை அழைப்பு நடத்தியது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீராஞ்சனம், தேங்காயில் நெய் தீபம், மணமகள் ஊஞ்சல் தரிசனம் இவற்றுடன், சௌராஷ்ட்ர மக்கள் - சம்பந்தம் செய்வதற்கு - பெண் வீட்டாராகச் சென்று திருமணத்தை நிசயம் செய்வது, சீர் கொண்டு செல்வது, சப்பர ஊர்வலம், மாலை மாற்றுதல், தாலி பூஜை, மாங்கல்ய தாரணம், என அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் காணும் வண்ணம் ஒளி பரப்பியது நன்று.
மணமகள் -புஷ்கலாதேவிக்கு அணிவித்த பல மாங்கல்யச் சரடுகள் - பிரசாதமாக - பொதுமக்களுக்கு வ்ழங்கப் பட்டது. திரு மணம் ஆகாத பெண்கள் வாங்கிக் கொண்டால் 21 தினங்களில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
காலை ஒரு பொழுது மங்களகரமாகச் சென்றது - எங்கும் தனித்துக் காணப்படும் ஐயப்பன் ஆரியங்காவில் மட்டும் தான் தம்பதி சமேதராக புஷ்கலா தேவியாருடன் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்காட்சியினைக் காணப் பரிந்துரைத்த நண்பன் சிவ முருகனுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ஆசிகள்.
Saturday, November 27, 2010
மதுரை முனிகள்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து பல மைல் தூரத்தில் இருந்தாலும் இவர் மதுரையில் மிக மிக பிரபலமான முனி. ஆம் அவர் தான் பாண்டி முனி.
(நக்கீரன் இணையதளத்திலிருந்து)
ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் :
தனிகோவிலில் வினாயகர், முருகன், மற்றும் நாகர்கள் நடுவே, வட்டக்கல் நட்ட தெய்வமாய், இருந்தவர் உருவம் கண்டு, யோகத்தில் அமர்ந்து காவல் தெய்வமாய் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் தீர்த்த பிரசாதம் தருவது குறிப்பிடத்தக்க்து.

விட்டவாசல் முனீஸ்வரர்
இவர் புதுமண்டபதிற்க்கு கிழக்கே எழுகடல் தெருவில் கிழக்கு காவல் முனியாக இருக்கிறார். மூன்றடி ஆழத்தில் இறங்கிச் சென்றுதான் இவரை வணங்க முடியும்.
வடக்கு வாசல் முனீஸ்வரர்,

இவர் வடக்கு கோபுரத்திற்க்கு அருகில், தனி சன்னிதியில், தன் பரிவார தெய்வங்களுடன் அருள் தருகிறார்.சித்திரை திருவிழா சமயத்தில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு இங்கிருந்தான் சந்தனம் செல்வது குறிப்பிடத்தக்கது. மதுரையை சார்ந்த நான்கு வீட்டு சகோதரர்கள் முறைமாற்றி இக்கோவிலை நிர்வகிக்கின்றானர்.

மேற்க்கு வாசல் முனீஸ்வரர்
மேற்க்கு பகுதியில் திண்டுக்கல் ரொட்டில் அபய வரத மூர்த்தியாக ஜடாமுனீஸ்வரர் வீற்றுள்ளார்.
முனிகளின் மேலதிக தகவல்கள்
http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=491


