Thursday, September 18, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பொற்றாமரை குளக்கரையில் அம்மையப்பனின் திருவிளையாடல்கள், மற்றும் பல நிகழ்வுகள் காலத்தால் அழிக்க முடியாத வகையில் மூலிகை ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன. (படங்களை சொடுக்கினால் பெரிதாகும்)


தற்ச்சமயம் சில படங்கள் திறக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! அதில் சிலவற்றை படங்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

முதலில் கணேசனின் திருவுருவம்.





அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலை முழுமையாக கொண்ட ஒரு மூலிகை ஓவியம். மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் சந்நிதிகள், பொற்றாமரை குளம், பெரிய மற்றும் சிறிய கோபுரங்கள் என்று முழுமையாக கோவிலையே தரிசித்து விடலாம்.

இப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதை அங்கிருக்கும் கல்வெட்டுக்களும் கூறுகின்றன.

மேலும் மூலிகை ஓவியப்ப படங்கள் அடுத்து வரும் பதிவுகளில்

No comments: