Friday, September 26, 2008

மீனாட்சி அம்மன் கோவில் - மூலிகை ஓவியங்கள்

மூலிகை ஓவியப்படங்கள் - 3


தேவேந்திர சாபவிமோசனம் - ஐராவத விமோசனம்

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளக்கரையில் வரையப்படும் மூலிகை ஓவியங்களை காட்டும் தொடர்.

தேவராஜன் இந்திரன், பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற வசிஸ்டர் கொடுத்த மாலையை ஐராவதத்தின் மீது வைத்து முனிவரை அவமதிக்கிறான், இச்செயலால் கோபபட்ட முனிவர் ’இந்திர பதவியை இழந்து வனத்தில் திரிய கடவது’ என்று சாபமிட, தான் செய்த வினைகளுக்கு பரிகாரமாக கடம்பவனத்தில் இருக்கும் சொக்கநாதருக்கு இந்திர விமானத்தை நிர்மானித்து, வணங்கி வர தான் சாபவிமோசனம் அடைகிறான். அதை காட்டும் காட்சிகள்.






இச்செயலுக்கு துணை சென்ற ஐராவத யானையும் தன் பாவங்களை தீர்க்க கடம்பவனத்தில் சொக்கநாதரை வணங்கும் காட்சி.




சொக்கநாதரை பற்றி ஆதி வாசிகளின் வாயிலாக கேட்ட ஐராவதம் சொக்கநாதரை வழிபட்டு கடைசியில் தேவராஜனை அடையும் காட்சி. (மேலிருந்து நான்காவது வரிசை, மூன்றாவதி கட்டம்)


அடுத்த பதிவு. தாருகா வனத்து ரிஷிகள் ஏவியது

No comments: