Tuesday, March 21, 2006

26: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 15

ஆதி சங்கரர் சொன்ன ஹிந்து சனாதன தர்மத்தில் ஐந்து தெய்வங்கள் உள்ளனர்,

1. கணபதி
2. சிவபெருமான்
3. அம்மன்
4. திருமால்
5. முருகன்

இந்த ஐவரும் ஒரே இடத்தில் காட்சி தந்தருள்வது திருபரங்குன்றத்தில். இதேபொன்றதொரு அமைப்பு திருக்கல்யாண சன்னிதியில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்னிதியில் விநாயகர், முருகன் விக்கிரகங்கள் உள்ளன. உள்ளே சன்னிதிக்குள் திருக்கல்யாண கோலத்தில் திருமால் தன் தங்கையை தாரைவார்த்துதர, மீனாட்சியம்மை மணமகளுக்குரிய நானத்துடன் நிற்க, சுந்தரேஸ்வரோ புன்னகையுடன் நிற்க்கின்றார். இவ்வமைப்பை காணும் பொழுது, இந்த ஐந்து தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி தந்தருள்வது போல் அமைந்துள்ளது.

முன்மண்டபத்தில் அழகிய வண்ணங்களில் நரசிம்மர், சரபேஸ்வரர், அஷ்ட லக்ஷ்மிகளான வீர லக்ஷுமி, விஜய லக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, ஆதி லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சிலைகளும், சங்கர நாராயணன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும். காண்போரின் தன்நிலையை மறக்கச்செய்யும்.

அடுத்த பதிவு கம்பத்தடிமண்டபம்.

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

2 comments:

குமரன் (Kumaran) said...

கல்யாண சுந்தரரை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உண்டு.

சிவமுருகன் said...

ஆம் பலரும் என்னிடம் கூறியுள்ளனர்.