


இவருக்கு அடுத்தபடியாக உள்ள தூணில் இருப்பவர், ஒரு ரிஷிபத்தினியின் சிலை, அவருடைய கதை பற்றி எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்ததெல்லாம் கர்ப காலத்தில் பெண்கள் இவரிடம் தமக்கு சுக பிரசவம் ஆக வேண்டிக்கொள்வர், சுகமாக முடிந்தவுடன் எண்ணை சாற்றியும், பாவாடை சாற்றியும் வழிபடுவர். இதற்க்கு மேல் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
அடுத்த தூணில் இருப்பவர், கோபியர் மன்னன், குழலூதும் கண்ணன். அங்கே அவர் நிற்பது குழலூதிய படி, அழகாக இருக்கும் இச்சிலை அனைவருக்கு எட்டிவிடும் அதனாலோ என்னவோ இச்சிலை சற்றே சிதிலமடைந்து உள்ளது.
அடுத்த பதிவு நிறைந்த மணதுடன் வெளி பிராகரத்திற்க்கு வருகிறோம்.
No comments:
Post a Comment