Wednesday, March 29, 2006

36: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 19

அறுபத்து மூவரை தரிசிக்கும் முன்,



முக்கியமான இருவரை தரிசிக்க இருக்கிறோம் அவர்களில் ஒருவர், தென்பாரதத்தில் யோககலைக்கு வித்திட்டவர், யோகங்களை ஈசனருளாள் அவரிடமிருந்து கற்று, உலகில் பரப்பியவர். அவரும் மற்றுமொருவரும் நடனமாடும் நடேசரருக்கருகில் நிற்பவர்கள். மற்றொருவரும் பக்தியில் அனைவரையும் மிஞ்சியவர். பூஜைக்கு மலையேறி மலர்பறிக்க தன் காலையே புலியின் காலாக மாற தவம்செய்தவர், வரமும் பெற்றவர்.
ஆம், பதஞ்சலி முனிவரையும், வியாக்ரபாதரையும், தான் தரிசிக்க இருக்கிறோம்.

என்றும் நடராஜரை வணங்கி நிற்க்கும், 'பதஞ்சலி முனிவரும், வியாக்ர பாதரும்' (கோப்பு படம், மீனாக்ஷி அம்மன் கோவில் படமல்ல).

இதோ இனி அறுபத்து மூவரை தரிசிப்போம். அறுபத்துமூவர்களில் முதன்மையானவர்கள் நால்வர். இவர்கள் பாடிய பாடல்களே தேவாரம் என்று வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த நாயன்மார் பிறந்த நக்ஷதிரத்தில் அவரவருக்கு மாலை மரியாதையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகிறது.

01. சுந்தரமுர்த்தி நாயனார்
02. திருநீலகண்ட நாயனார்
03. ஐயர்பஹை நாயனார்
04.இளயன்குடிமார நாயனார்
05.மெய்பொருள் நாயனார்
06.விரல்மிண்ட நாயனார்
07.ஆமரநீதி நாயனார்
08.ஏரிபாத நாயனார்
09.ஏநாதிநாத நாயனார்
10.கண்ணப்ப நாயனார்
11.குன்கிலியகலய நாயனார்
12.மனகன்சர நாயனார்
13.அரிவத்தய நாயனார்
14.அனய நாயனார்
15.மூர்த்தி நாயனார்
16.முருக நாயனார்
17.ருத்ரபசுபதி நாயனார்
18.திருநாளைபொவார் நாயனார்
19.திருகுறிப்புதொன்ட நாயனார்
20.சந்தெஸ்வர நாயனார்
21.திருநாவுக்கரசர் நாயனார்
22.குலச்சிரை நாயனார்
23.பெருமிழலை குரும்ப நாயனார்
24.காரைகல் ஆம்மையர்
25.ஆபூத்தி நாயனார்
26.திருநீலனக்க நாயனார்
27.நமிநந்திஅடிகள்
28.திருஞாணசம்பந்தர்
29.ஏயர்கொன்கலிகம நாயனார்
30.திருமூலநாயனார்
31.தண்டி அடிகள் நாயனார்
32.முர்க நாயனார்
33.சோமசிர நாயனார்
34.சக்கிய நாயனார்
35.சிரப்புலி நாயனார்
36.சிறுதொண்ட நாயனார்
37.செரமன் பெருமாள் நாயனார்
38.கணநாத நாயனார்
39.கூடுருவ நாயனார்
40.புகல் சொல்லா நாயனார்
41.நரசிங்க முனியரையர்
42.அடிபட்ட நாயனார்
43.கலிகம்ப நாயனார்
44.கலிய நாயனார்
45.சத்தி நாயனார்
46.ஐயடிகள் கடவர்கொன் நாயனார்
47.கனம்புல்ல நாயனார்
48.கரி நாயனார்
49.நின்ற சீர் நெடுமர நாயனார்
50.மங்கயர்கரசியர்
51.வயிலர் நாயனார்
52.முனையதுவர் நாயனார்
53.கழர்சிங்க நாயனார்
54.செருதுணை நாயனார்
55.ஈதன்கழி நாயனார்
56.புகழ் துனை நாயனார்
57.கொட்புளி நாயனார்
58.புசலர் நாயனார்
59.நேச நாயனார்
60.கோசெந்கத் சொழ நாயனார்
61.திருநீலகன்ட யாழ்பணர்
62.சதய நாயனார்
63.இசைஞாணியர்


இவர்கள் அனைவரின் சாதனைகள் ஒன்றைகொன்று மிஞ்சும் அளவுக்குள்ளது. ஈசன் நினைத்திருந்தால் இவர்களனைவரின் சாதனைகளையும், சோதனைகளையும் தாமொருவரே நிகழ்த்தியிருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் மூலம் இறைவன் சொல்லாமல் சொல்வது "நீ யாராக இருந்தாலும், யவராக இருந்தாலும், எச்சமூக, சமுதாயத்தவராக இருந்தாலும், எப்பாலாக (ஆண்,பெண்) இருந்தாலும் எம்மையடைவதில் (சங்கரனை) எந்த பேதமும் இல்லை, அனைவருக்கும் யாம் சமம்" என்பதேயாகும், ஏனெனில், இவர்களனைவரும் பல பகுதிகளில் பிறந்தவர்கள், பல பிண்ணனியிலிருந்து வந்தவர்கள்.

இவர்களை தொடர்ந்து அருள்பவர்கள் ஐந்துவிதமான லிங்கங்கள் அப்பு லிங்கம், ஜுரலிங்கம், லவன(உப்பு) லிங்கம், ஸஹஸ்ர (ஆயிரம்) லிங்கம், தேயு லிங்கம் என்பவனாம். சிவராத்திரி சமயத்தில் இங்கு நடக்கும் சிறப்பு ஆராதனையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வரும் பதிவுகளில் வேதமாதா சரஸ்வதியும், தென்முகக்கடவுள் தக்ஷினாமூர்த்தியும், சப்தமாதர்கள், குருமூர்த்தியும், இரட்டை கணபதியும், உற்சவரும்.

முந்தைய பதிவு. __________________________ அடுத்த பதிவு

4 comments:

rnatesan said...

அய்யோ,
நன்றி நன்றி,
ரொம்ப நேரம் உங்கள் குமரன் படைப்புக்களை சிதம்பர நடராஜர் சன்னதியில் விவாதித்தோம்!!

சிவமுருகன் said...

நன்றி. நன்றி.

குமரன் (Kumaran) said...

அறுபத்தி மூவர் பெயர்களையும் சொன்னதற்கு மிக்க நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

www.shaivam.org - யிலும், www.tamilnation.org - யிலும் ஆங்கிலத்தில் கிடைத்த பெயர்களை தமிழில் பதித்தேன்.

நன்றி குமரன்.