Friday, March 31, 2006

46: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 20


சுவாமி சன்னிதியில் லிங்கங்களுக்கு அடுத்து படியாக கலைமகள் சரஸ்வதி அருளுகிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில் விணைவழிபாடு நடக்கிறது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் சிறாப்பாகவும், விஷேச நாட்களில் சிறப்பு அலங்காரங்களான சந்கன காப்பு, வெள்ளிகவச சத்துபடி என்று பலவிதமான பூஜைகள் அன்னை கலைவாணிக்கு செய்யப்படுகிறது. சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்தும். "சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி வித்ய-ஆரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா." என்று இவரை வணங்குவோம்.

ஈசனின் திரிநேத்திரங்களில்(மூன்றுகண்கள்) நெற்றிகண்ணான சரஸ்வதி முதலிலும், ஸ்ரீ துர்க்கை அடுத்தபடியாகவும், ஸ்ரீ லக்ஷிமி கடைசியாகவும் அமையப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக தக்ஷிணாமூர்த்தி, பிரகாராதில் உள்ளார்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவொ மஹெஸ்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவெ நம:
குரவே ஸர்வ லௌகானாம் ப்ஹிஜெ ப்ஹவ ரொகினாம்
நித்யே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்தயெ நம:
ஆக்னான திமரான்தஸ்ய ஞானானான் சன ஸலாகய
சக்ஷுர் ஊன்மூலிதம் ஏன தச்மை ஸ்ரீ குரவெ நம:
என்று இவரை வணங்குவோம்.

இவரின் இருபுரமும் இந்திரனின் ஐராவதத்தின் நிழல்யானைகளான வெள்ளை நிற யானைகள் நிற்கிறது. அவையாவும் இந்திரவிமானத்தை தாங்கி நிற்கிறது. அதில் இரண்டு யானைகள் சுவாமி சன்னிதிக்குள்ளும், இரண்டு யானைகள் தக்ஷிணாமூர்த்தியின் இருபுரமும், இரண்டு யானைகள் ஸ்ரீ துர்க்கையின் இருபுரமும், இரண்டு யானைகள் லிங்கோத்பவரின் இருபுரமுமாக எட்டு யானைகள் நிற்கின்றன.

தக்ஷிணாமூர்த்தியின் எதிரில் சப்தமாதர்களும், மேற்க்கு நோக்கிய குருமூர்த்தியும், சப்தமாதர்களுக்கு உபதேசம் செய்தபடியும் காட்சி தந்தருள்கிறார், இவருக்கு எதிரில் விக்நேசரும் அபய முத்திரை காட்டியபடி நிற்கிறார்.

மேற்க்கே உள்ளது சுவாமி மற்றும் பிரியாவிடையும், மீனாட்சியின் உற்சவர்கள்.

இவர்கள் மூலவரின் பிரதி பிம்பமாக உள்ளனர். எப்படி மின்சாரமானது செம்பு கம்பியின் மூலமாக பாய்ந்து இலக்கை அடைகிறதோ, அப்படியே மூலவரின் சக்தியை இவுற்சவர்கள் மக்களுக்கு அளிக்கின்றனர். இவர்களுக்கு செய்யப்படும் அலங்காரம் எத்தனை எத்தனை, இவர்கள் செய்யும் லீலைகள் எத்தனை எத்தனை, அதில் ஒன்று பட்டாபிஷேகம். சித்திரை முதல் ஆவணி வரை அம்மனும் ஆவணி முதல் சித்திரை வரை அய்யனும் ஆட்சி செய்வது மேலும் சிறப்பு.

அடுத்த பதிவில் சுவாமி சன்னிதிச் சுவரில் வரையபட்டிருக்கும் திருவிளையாடல் காட்சிகள்.

முந்தைய பதிவு.

அடுத்த பதிவு

4 comments:

rnatesan said...

எதை பாராட்டுவது என்றேத் தெரியவில்லை!!படங்கள் எங்கிருந்துக் கிடைக்கின்றன!!

சிவமுருகன் said...

அன்பு நடேசன்,

வலையில் அலைந்த போதும், தினசரிகளை பார்க்கும் பொழுதும் கிடைத்த படங்கள்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

அந்த எட்டு யானைகளும் எண்திசைகளிலும் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் அஷ்டதிக் கஜங்கள். அவையே சுந்தரேஸ்வரரின் சன்னிதி விமானத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

சிவமுருகன் said...

குமரன், ஆம் நீங்கள் சொல்வது மிகச்சரி.